கடந்த ஜனவரி 20 அன்று புதுச்சேரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா வாரியர்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா காலகட்டத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் கௌரவிப்பு விழா, புதுச்சேரி முதலவர் நாராயணசாமியின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி மற்றும் மாநில பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்புரையாற்றினர்.
இதற்கு தலைமை தாங்கிய புதுச்சேரி மாநில முதல்வர் திரு V.நாராயணசாமி நினைவு பரிசை பெற்றப்பின் சிறப்புரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.