நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிலுக்குள் வைத்து ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளிப்பாளையும் காமராஜர் காலனியில் கணவரை இழந்த பெண் ஒருவர் கட்டிட கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். தனது சகோதரி வீட்டில் தங்கி இருக்கும் அவர் நேற்றிரவு தனது பணியை முடித்துவிட்டுச் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த அருண்ராஜ் மற்றும் ஆனந்த் ஆகிய இரு இளைஞர்கள் பெண்னின் கூலிப் பணத்தைப் பறித்து அருகில் உள்ள கோவிலுக்கு இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டுக்குச் சென்று மிரட்டலும் விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அப்பெண் தற்போது நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரு இளைஞர்களையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், கஷ்மீர் மாநிலத்திலும் உத்தர பிரதேசத்திலும் கோவிலுக்குள் கூட்டு பலாத்காரம் நடந்தது நாட்டையே உலுக்கியது. தற்போது அதைப் போல் தமிழகத்திலும் ஒரு கூட்டு பலாத்காரம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் என்றும் பாராமல் கூட்டு பலாத்காரம் செய்த இரு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.