– ரியாஸ் அகமது
அக்கிரமக்கார சர்வாதிகார ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு வசந்தத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு தாங்கள் எதிர்பார்க்கும் அமைதியும் முன்னேற்றமும் எப்போதும் கிடைப்பதில்லை. பதவியில் உள்ளவர்கள் அகற்றப்பட்ட பிறகு ஏற்படும் குழப்பங்களும் அவலங்களும் முன்னர் இருந்த ஆட்சியே பரவாயில்லை என்ற எண்ணத்தை அம்மக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. தற்போது சூடான் மக்களும் இதே மனநிலையில்தான் இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. மக்கள் எழுச்சிக்கு பின்னரும் முந்தைய ஆட்சியின் முகவர்கள் புதிய முகமூடி அணிந்து புதியவர்களுடன் இணைந்து கொள்வதே இந்த ஏமாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
எகிப்தில் ஹோஸ்னி முபாரக் ஆட்சியிலும் அதிகாரத்தை அனுபவித்த அப்துல் ஃபத்தாஹ் சிசி, மக்கள் எழுச்சிக்கு பின்னர் தன்னை புதிய ஆட்சியாளர்களுடன் இணைத்துக் கொண்டதே எகிப்தின் தற்போதைய அவல நிலைக்கு காரணம் என்பதை மறந்துவிட முடியாது. ஈராக், லிபியா போன்ற நாடுகளில் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் ஏற்படுத்திய குழப்பங்கள் அந்நாடுகளை மோசமான படுகுழிக்கு இட்டுச் சென்றன.
முப்பது ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த உமர் அல் பஷீருக்கு எதிராக போராட்டங்களை நடத்திய மக்கள் 2019இல்
… முழு கட்டுரையையும் படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள்.
இணைவதற்கு இங்கு செல்லவும் Click Here
சந்தாதாரராக இருந்தால் My Account ல் Login